சிலிக்கான்வேலி,
அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியதற்கான பங்களிப்பை பாராட்டி அமெரிக்க-இந்திய பேராசிரியருக்கு இந்தாண்டுக்கான சிறந்த விருது வழங்கப்படவுள்ளது.
விருதை பெறப்போகும் பேராசிரியர் ரமேஷ் கங்குலி(72), வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணித மற்றும் இசைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ரமேஷ் கங்குலி பெங்களூரில் பிறந்து, மும்பையில் வளர்ந்தவர். மும்பை பல்கலைக்கழகத்தில் இளம்கலை பட்டம் பெற்றார். 1957-ம் ஆண்டு உதவித் தொகையை பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தில் சேர்ந்தார்.
முதுகலை பட்டத்தை வெற்றிகரமாக முடித்த அவர், பின்னர் அமெரிக்காவின் மசாசூசெட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பைத் தொடங்கினார். 1961-ம் ஆண்டு “பிஎச்டி’ பட்டத்தை பெற்றார். இதையடுத்து வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
விடுதலை உணர்வை ஏற்படுத்தினார்:
வாஷிங்டனில் பேராசிரியர் பணியைத் தொடங்கியதுமே அமெரிக்காவின் சீட்டேல் பகுதியில் வாழும் இந்தியர்கள் மத்தியில் ரமேஷ் கங்குலி விடுதலை உணர்வை ஏற்படுத்தினார். அவரது இந்தப் பங்களிப்பை பாராட்டித்தான் அவருக்கு தற்போது சிறந்த விருது வழங்கப்படவுள்ளது.
விருது வழங்கும் நிகழ்ச்சி ஜூலை 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் ரமேஷ் கங்குலி தவிர்த்து, புதிதாக அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ள இந்தியர்களும் பாராட்டி கெüரவிக்கப்படுவார்கள். ரமேஷ் கங்குலி 1971-ம் ஆண்டே அமெரிக்க குடியுரிமையை பெற்றுவிட்டார்.
இந்நிலையில் ரமேஷ் கங்குலி கூறும்போது, “தெற்காசியர்களின் கலாசாரத்தை பிறர் அறிந்து கொள்ள இசை ஒரு முக்கியமான ஊடகமாக அமைந்துள்ளது என்று நான் நினைக்கிறேன். எங்குசென்றாலும் இசைக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இசையின் மூலம் மக்கள் தங்களது கலாசாரத்தை மட்டுமல்லாது உணர்வுகளையும் எளிமையாக பகிர்ந்து கொள்ள முடிகிறது என்ற ரமேஷ், 19-ம் வயதில் ரயில் விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்தாலும், தன்னம்பிக்கை என்ற ஆயுதத்தால் இன்று சிறந்த சாதனையாளராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Article:
http://bsubra.wordpress.com/2007/07/02/us-recognizes-ramesh-ganguly-for-his-contributions-toward-south-asians-assimilation/
தலைப்பு செய்திகள்
Blog Archive
-
▼
2007
(73)
-
▼
Jul
(26)
- # வாட்டுது வருமான வரி!
- # பன்னாட்டு நிறுவனங்களிடம் கேள்விக்குறியாகும் இந்த...
- # கிரெடிட் கார்டு - கடன் வசூல் என்ற பெயரில் அராஜகமா?
- # மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரி...
- # வணிக நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையும்..., கு...
- # கல்வி முறையில் மாற்றம் தேவை!
- # கிராமங்களில் வங்கிச் சேவை எஸ். கோபாலகிருஷ்ணன்
- # நாட்டின் வளர்ச்சியில் நாளேடுகள்!
- திரைப்பட வரலாறு 708 இளையராஜா இசை அமைக்க மறுத்த ப...
- மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்
- வீரமணி மாமாவின் பெரியார் புரா பாரீர்
- கலாமின் கனவு இந்தியா ஏழைகளுக்கானதா?
- ஒலி, ஒளி, விளம்பரத் தொல்லை க.ப. அறவாணன
- நீரிழிவு நோயாளிக்கு புதிய வகை அரிசி கண்டுபிடிப்பு
- வானில் ஓர் எல்லைப் பிரச்னை! வி. கிருஷ்ணமூர்த்தி
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை வியாதிக்குத் த...
- மதிப்போ மதிப்பு; பங்கு மதிப்பு!! குப்புசாமி செல்ல...
- உயிர் எரிசக்தி மாயை-ஓர் அபாயம்! ஆர்.எஸ்.நாராயணன்
- ரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும் எஸ். கோபாலக...
- உளவுத் துறையில் ஊடுருவல் டி.புருஷோத்தமன்
- அமெரிக்க-இந்தியருக்கு “விடுதலை உணர்வு விருது’
- அரசியல்வாதிகளும் அரசியல்கட்சிகளும்! கே.ராமமூர்த்தி
- அமெரிக்கர்களின் சேமிப்பு
- மேலாளர்களிடம் மனதில் உள்ளதை கொட்டலாமா?
- அமெரிக்காவில் நல்ல டாக்டர்களை கண்டு பிடிப்பது எப்படி?
- பணக்காரர்கள் திமிர் பிடித்தவர்களா?
-
▼
Jul
(26)
வணக்கம்
இங்கே இணைய தளங்களில் நான் பார்த்ததை, படித்ததை, கேட்டதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
...............................
செந்தில் குமார்
Subscribe to:
Post Comments (Atom)