ரசித்தவை

செந்தில்குமார் | www.senthil.co.nr |

"அப்துல்கலாமின் இந்தியா 2020 ஏதோ அணுகுண்டாலும், ராணுவ பலத்தாலும் அடையப்பட வேண்டிய ஒன்று என்றும் அது ஏழைகளுக்கானது அல்ல என்றும் ஒரு திட்டமிட்ட பொய் பிரச்சாரம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. முதலில் கலாம் சொன்ன இந்தியா 2020 என்பது என்ன என்பதை பார்ப்போம். http://presidentofindia.nic.in/scripts/republicdetail.jsp?id=5

"2020ம் ஆண்டுக்குள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மகக்ளின் எண்ணிக்கை பூஜ்யமாக வேண்டும். எழுதப்படிக்க தெரிந்தோர் எண்ணிக்கை 100% ஆக வேண்டும்.இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு குறியீடு 127லில் இருந்து 50க்கு உயரவேண்டும்.ஒவ்வொரு இந்தியனும் ஒரு பல்கலைகழக டிகிரி படிப்பது சாத்தியமாக வேண்டும்.ஈ கவர்னன்ஸ் திட்டம் மூலம் அரசாங்கத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.ஒவ்வொரு கிராமத்துக்கும் இடையறா மின்சார சப்ளை கிடைக்க வேண்டும்.ஒவ்வொரு கிராமத்துக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கழிவறை மற்றும் சுகாதாரம் கிடைக்க செய்திடல் வேண்டும்.பொறுப்பான செயல்திட்டம் மூலம் தொழிற்சாலைகளை நிறுவி நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.இந்தியாவின் மூலை முடுக்குகளில் இருக்கும் ஏழைகளுக்கும் மருத்துவ வசதி மிகக்குறைந்த செலவில் கிடைக்க செய்திடல் வேண்டும்.மேலே சொன்ன மக்கள் நல திட்டங்களை அடைந்தபின் இந்தியா உலக அமைதிக்கும் பாடுபடல் வேண்டும்.
மேலே சொன்ன திட்டங்களை அடைய ஒவ்வொரு இந்தியனும் பாடுபட வேண்டும். இதுவரை அரசு திட்டங்கள் சென்றடையாத ஏழைகளை நாம் சென்று அடைய முயலவேண்டும்.
விவசாயிகளுக்கு நபார்ட் மற்றும் பல வங்கிகள் மூலம் கடன் வழங்கி அவர்களை கடன்சுமையிலிருந்து மீட்க வேண்டும். ஆராய்ச்சியாளர்கள், அறிவாளிகள், பல்கலைகழகங்கள், தொழிற்சாலைகள் ஆகியோர் விவசாயிகளுடன் சேர்ந்து வேலை செய்து உனவு உற்பத்தி, தானியம் பதப்படுத்துதல், விவசாய உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.இன்சூரன்ஸ் கம்பனிகள் மைக்ரோ கிரெடிட், பயிர் இன்சூரன்ஸ் ஆகியவற்றை விவசாயிகளுக்கு செய்து தரவேண்டும்.
கார்ப்பரேட்டுகள் கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதை தமது சமுதாய கடமையாக நினைக்கவேண்டும். தொலைதொடர்பு யுகம் என்று நாம் பெருமைகொள்வது உண்மை எனில் இதுவரை அணுகப்படடாத மக்களை நாம் அணுகவேண்டும்"
இதுதான்யா கலாம் சொல்லும் இந்தியா 2020. இதில் என்னய்யா மேட்டுகுடித்தனமும் இந்துத்வமும் இருக்கிறது? இந்தியாவில் ஏழைகள் இருக்கையில் அணுகுண்டு வெடித்தார் என்று கம்யூனிஸ்டுகள் புகார் சொல்வதை கேட்டால் சிரிப்பாய்தான்யா இருக்கு. ஏதோ அவரே தனது வீட்டு பொடக்காளியில் அணுகுண்டு தயாரித்தார் என்பது போல் தான் தூஷண பிரச்சாரம் நடக்கிறது.
1946ல் ரஷ்யாவில் பட்டினிசாவுகள் நடந்துகொண்டிருந்தபோது ரஷ்யா அணுகுண்டு வெடித்தது. 1962ல் சீனாவில் அணுகுண்டு வெடித்தார்கள். அதன்பின் இந்தியா 1974ல் அணுகுண்டு வெடித்தது.அதன்பின் முழுஅளவில் 1998ல் வெடித்தது.
இந்தியா ஏழைநாடு என்பதற்காக ஆயுதமோ, ராணுவமோ இல்லாமல் இருக்க முடியுமா?இல்லை இந்தியா மேல் படை எடுக்கிறவன் தான் இந்தியா ஏழைநாடு என்பதற்காக அரிவாள், அம்புடன் படை எடுப்பானா? பக்கத்தில் சீனா அணுஆயுதம் முதல் சகல முஸ்தீபுகளுடனும் உட்கார்ந்திருக்கிறது. பக்கத்து பாகிஸ்தான் அணுஆயுதம் வைத்திருக்கிறது. ஆப்கானில் தலிபான் ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறது. அமெரிக்கா இந்துமாக்கடலில் உலாத்திக்கொண்டிருக்கிறது. இப்படி அவனவன் ஆயுதப்பெருக்கம் செய்துகொண்டு போக நாம் மட்டும் 1946ல் வாங்கிய கைதுப்பாக்கியையும் பயோனெட்டையும் வைத்துக்கொண்டிருக்க வேண்டுமா என்ன?
இந்தியா ராணுவத்துக்கு செலவு செய்வதை குறைக்க வைத்து அதன்பின் பாகிஸ்தானையும் சீனாவையும் நம் மேல் படை எடுக்க விடுவது நல்ல ஐடியாதான். ஆனால் அதை எல்லாம் நம்ப நம்ம ஆளுக இளிச்சவாயன் இல்லையே? என்ன செய்வது? இப்பல்லாம் மக்கள் கொஞ்சம் விவரமாதானே இருக்காங்க.
மற்றபடி கலாம் ஒரு தேசபக்தியுள்ள இந்தியர். தேச பக்தியுள்ள தமிழ்பேசும் முஸ்லிம். அது பலரது கண்களை உறுத்துகிறது போலும்:).
கலாமை வேண்டுமானால் பதவியை விட்டு துரத்தி விடலாம். கோடிக்கணக்கான பிஞ்சு நெஞ்சங்கள் மனதில் அவர் ஏற்றிவைத்த தேசபக்தி சுடரை உங்களால் என்ன செய்ய முடியும் என தெரியவில்லை:)
Article:
http://holyox.blogspot.com/2007/06/305.html

0 comments: