வருடத்துக்கு எழுபதாயிரம் டாலர் சம்பளம் வாங்கும் அமெரிக்கர்களை “நீங்கள் மாதத்துக்கு எவ்வளவு மிச்சப்படுத்துகிறீர்கள்” என்று கேட்டால், “மாதம் 500 டாலர் சேமிப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது” என்று அலுத்துக் கொள்கிறார்கள். “என் சம்பளம் மட்டும் இரு மடங்கானால் இன்னும் பல மடங்கு சேமிப்பேன்” என்று பெருமூச்சு விடுகிறார்கள்.
வருடத்துக்கு 250,000 டாலர் சம்பாதிக்கும் கணவான்களை கேட்டாலும் இதே பதில் தான் வருகிறது!!
அமெரிக்கர்கள் பணத்தை அதிகம் சேமிப்பதில்லை என்பது உலகமறிந்த விஷயம். நடுத்தர மக்கள் மட்டும் இல்லாமல் பணக்காரர்களும் பணத்தை சேமிப்பதற்கு கஷ்டப்படுகிறார்கள் என்று HSBC வங்கி நடத்திய சர்வே கூறுகிறது.
இது கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், உலகம் முழுதும் இது நடைமுறையான விஷயம். தங்களின் வருமானம் உயர உயர, மக்கள் தங்கள் தேவைகளையும் உயர்த்திக் கொள்கிறார்கள்.
சான் பிராசிஸ்கோவில் 70,000 டாலர் சம்பளம் வாங்கும் வங்கி அதிகாரி, ஹோண்டா கார் வாங்கும் போது சந்தோஷப்படுகிறார். பதவி உயர்வு கிடைத்து உயர் அதிகாரியாக 200,000 டாலர் சம்பளத்தில் நியூயார்க் நகருக்கு செல்லும்போது, ஹோண்டா காரை வைத்திருப்பது கௌரவ குறைச்சலாக தெரிகிறது! BMW, பென்ஸ் கார்களை வாங்கினால் தான் தனக்கு மரியாதை என்று தோன்றுகிறது. சம்பளம் உயர உயர செலவும் வானத்தை நோக்கி செல்கிறது!
அமெரிக்கர்களின் சேமிப்பு சதவிகிதம் 2005-ல் பூஜ்யமாகி விட்டது! தற்சமயம் அது நெகட்டிவ் நம்பரில் இருப்பதாக தகவல்.
HSBC வங்கியின் சர்வேயில் 250,000 டாலர் வருமானம் உள்ளவர்களில் 10 சதவிகிதம் பேர் “வருகிற வருமானத்தால் ஏதோ குடும்பத்தை ஓட்ட முடிகிறது” என்று அலுத்துக் கொண்டிருக்கிறார்கள். அட பாவிகளா!
அதே பிரிவில் 49 சதவிகிதம் பேர் “சேமிக்க வேண்டும் என்று அவசியமில்லை. செலவு செய்வதற்கு தான் சம்பாதிப்பதே” என்று கூறுகிறார்கள்.
வருடத்துக்கு 50,000 டாலரிலிருந்து 100,000 டாலர் வரை சம்பாதிப்பவர்கள் சேமிப்பதை விட, 250,000 டாலர் சம்பாதிப்பவர்கள் சேமிப்பது குறைவாக இருக்கிறது என்று HSBC வங்கி கூறுகிறது.
இது போன்ற நிலைமை அமெரிக்காவில் மட்டும் இல்லை. உலகம் முழுதும் இது போன்ற trend இருக்கிறது.
நமக்கு பதவி உயர்வு கிடைக்கும் போது அல்லது வருமானம் கூடும் போது, கிடைக்கும் அதிக வருமானத்தில் குறைந்தது 60 சதவிகிதத்தை முதலீடு செய்ய வேண்டும். வங்கி கணக்கிலிருந்து நேரடியாக பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது சிறந்தது. அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால், அதிக வருமானத்தை 401k திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது.
நம் கையில் பணம் கிடைத்தால் தான் செலவு செய்யத் தோன்றும். வங்கியிலிருந்து ஒவ்வொரு மாதமும் சேமிப்பு/முதலீட்டு கணக்குக்கு டைரக்ட் டெபாசிட் செய்து விட்டால் உங்கள் சேமிப்பை ஆட்டோ பைலட்டில் போட்டது போலாகி விடும். சேமிப்பதற்கு அது தான் சிறந்த வழி!
Article:
http://tamilnithi.blogspot.com/2007/05/blog-post_28.html
தலைப்பு செய்திகள்
Blog Archive
-
▼
2007
(73)
-
▼
Jul
(26)
- # வாட்டுது வருமான வரி!
- # பன்னாட்டு நிறுவனங்களிடம் கேள்விக்குறியாகும் இந்த...
- # கிரெடிட் கார்டு - கடன் வசூல் என்ற பெயரில் அராஜகமா?
- # மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரி...
- # வணிக நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையும்..., கு...
- # கல்வி முறையில் மாற்றம் தேவை!
- # கிராமங்களில் வங்கிச் சேவை எஸ். கோபாலகிருஷ்ணன்
- # நாட்டின் வளர்ச்சியில் நாளேடுகள்!
- திரைப்பட வரலாறு 708 இளையராஜா இசை அமைக்க மறுத்த ப...
- மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்
- வீரமணி மாமாவின் பெரியார் புரா பாரீர்
- கலாமின் கனவு இந்தியா ஏழைகளுக்கானதா?
- ஒலி, ஒளி, விளம்பரத் தொல்லை க.ப. அறவாணன
- நீரிழிவு நோயாளிக்கு புதிய வகை அரிசி கண்டுபிடிப்பு
- வானில் ஓர் எல்லைப் பிரச்னை! வி. கிருஷ்ணமூர்த்தி
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை வியாதிக்குத் த...
- மதிப்போ மதிப்பு; பங்கு மதிப்பு!! குப்புசாமி செல்ல...
- உயிர் எரிசக்தி மாயை-ஓர் அபாயம்! ஆர்.எஸ்.நாராயணன்
- ரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும் எஸ். கோபாலக...
- உளவுத் துறையில் ஊடுருவல் டி.புருஷோத்தமன்
- அமெரிக்க-இந்தியருக்கு “விடுதலை உணர்வு விருது’
- அரசியல்வாதிகளும் அரசியல்கட்சிகளும்! கே.ராமமூர்த்தி
- அமெரிக்கர்களின் சேமிப்பு
- மேலாளர்களிடம் மனதில் உள்ளதை கொட்டலாமா?
- அமெரிக்காவில் நல்ல டாக்டர்களை கண்டு பிடிப்பது எப்படி?
- பணக்காரர்கள் திமிர் பிடித்தவர்களா?
-
▼
Jul
(26)
வணக்கம்
இங்கே இணைய தளங்களில் நான் பார்த்ததை, படித்ததை, கேட்டதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
...............................
செந்தில் குமார்
Subscribe to:
Post Comments (Atom)