புரா என்றால் நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்வது என்று பொருள்.பாரத குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் இந்தியா 2020 திட்டத்தை அடியொற்றி பிரதமர் மன்மோகன் சிங்கால் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின்படி இந்தியாவின் மிக ஏழ்மையான 5000 கிராம மண்டலங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் புரா.
வழக்கமாக இம்மாதிரி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டால் அதை அரசு ஊழியர்கள் ஸ்வாஹா செய்துவிடுவார்கள் என்பதால் புரா திட்டம் சிறுதொழில் முனைவோரினாலும் மக்களாலும், உள்ளூர் சிறுதொழில் நிறுவனங்களாலும் நிர்வகிக்கப்படுகிறது. இதன்படி தஞ்சை மாவட்டத்தில் 57 பின் தங்கிய கிராமங்களுக்கு உதவி செய்யும் பொறுப்பு பெரியார் மணியம்மை டிரஸ்டுக்கு அளிக்கப்பட்டது.
பெரியார் புரா திட்டம் என தஞ்சையில் அழைக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் தஞ்சையில் மிகவும் பிந்தங்கிய 57 கிராமங்களும் புதுக்கோட்டையில் மிகவும் பின் தங்கிய 8 கிராமங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திலும் உள்ள நிலங்கள் தரிசு நிலங்கள். இதுவரை வெள்ளாமையே செய்யப்படாதவை.(http://www.periyarpura.org/about.html) இந்த கிராமங்கள் அனைத்தும் விவசாயமும், வேலை வாய்ப்பும் அற்ற பகுதிகள். மகக்ள் வறுமைக்கோட்டுக்கு கீழே உழலுகிறவர்கள். சிலர் சொல்வது போல் முப்போகமும் அரிசி விளையும் நிலத்தில் காட்டாமணக்கு பயிரிடப்படுகிறது என சொல்லப்படுவது முழுப்பொய்.
அந்த கிராமங்கள் சிலவற்றின் தொழில்களை பாருங்கள். இதுவா முப்போகம் அரிசி விளையும் பூமி? (Update: பெரியார் புரா ஏற்படுத்திய தொழில்கள் இவையா அல்லது இதற்கு முன்பே அவர்கள் இந்த தொழிலை செய்தார்களா என்பது தெரியவில்லை. தற்போது அவர்கள் செய்யும் தொழில் இது.அந்த கிராமங்கள் முழுக்க வரண்ட ஏழ்மை நிரம்பிய பூமி என்பதை சொல்லியுள்ளனர
அச்சம்பட்டி - தேங்காய் நார் உரிப்பது
பூதலூர் - செங்கல் சுடுவது
கொமாரபுரம் - மூங்கில் வெட்டுவது
பலையபட்டி - மூலிகை வளர்ப்பது
வல்லம் - சாண எரிவாயு
கிராமங்களின் முழு பட்டியலுக்கு இங்கே சொடுக்கவும் http://www.periyarpura.org/villages.html
இந்த முப்போகமும் நெல் விளையும் கிராமங்களின் புகைப்படங்களை பாருங்கள்.
இந்த தரிசு கிராமங்களில் பெரியார் புரா செய்துவரும் பணிகள் http://www.periyarpura.org/connect.html
சாலை வசதியை மேம்படுத்துதல்
சுகாதார வசதியை மேம்படுத்துதல்
மருத்துவ மையங்களை நிறுவி மருத்துவ வசதியை செய்தல்
விவசாய பொருட்கள் பற்றிய தினசரி நிலவரத்தை வழங்குதல்
கைவினைப்பொருட்கள் செய்வது பற்றி பயிற்சி அளித்தல்
சிறுதொழில் பற்றிய அறிவை புகட்டுதல்
இதுதான்யா பெரியார் புராவின் நோக்கம்.
இங்கே சோற்றுக்கே வழியின்றி சாகும் மக்களுக்கு ஏற்றுமதி மூலம் வருமானம் தரும் காட்டாமணக்கு பயிரிட பெரியார் புரா ஆலோசனை சொல்கிறது. உடனே அதற்கு அமெரிக்கனுக்கு வீரமணி மாமா வேலை பார்க்கிறார், உலகவங்கிக்கு கூட்டி கொடுக்கிறார் என பட்டம் கட்டினால் அந்த மக்கள் இருப்பதா சாவதா என நீங்களே சொல்லுங்கள். புல் பூண்டே விளையாத பூமியில் காட்டாமனக்கு போட்டு அதை ஏற்றுமதி செய்தால் தோழர்களுக்கு பொறுப்பதில்லை. அமெரிக்கனுக்கு ஏற்றுமதி ஆகிரதே என கூக்குரல் இடுகின்றனர்.
இந்த தரிசு பூமியில் ரோடும், மின்சாரமும் வரவைத்து மகக்களுக்கு சிறுதொழில், கைத்தொழில் ஆகியவற்றை கற்றுக்கொடுத்து தரிசு நிலத்தில் பயிரிடக்கூடிய பயிர் வகைகளை பயிரிட சொல்லிக்கொடுப்பது பெரியார் புராவின் நோக்கம். புல்லே முளைக்காத பூமியில் காட்டாமணக்கு போட்டு ஏற்றுமதி செய்வது அந்த மகக்ளின் சோற்றுக்குத்தானே தவிர அவர்களை கோடீஸ்வரனாக்க அல்ல. ஆனால் அப்படி செய்தால் அமெரிக்கனுக்கு நாட்டை கூட்டி கொடுப்பதாகுமாம். இந்த மண்ணில் ரோடு போட்டு, மின்சாரம் வரவைத்தால் டூரிசம் அதிகமாகிவிடுமாம். அதன்பின் அங்கே விபச்சாரம் நடக்குமாம். அதனால் வீரமணி , மாமா ஆகிவிடுவாராம்.
தலையை முட்டிக்கொள்ள குட்டிசுவர் ஏதேனும் இருந்தால் காட்டுங்கள். முட்டிக்கொள்கிறேன்.
Article:
http://holyox.blogspot.com/2007/06/307.html
தலைப்பு செய்திகள்
Blog Archive
-
▼
2007
(73)
-
▼
Jul
(26)
- # வாட்டுது வருமான வரி!
- # பன்னாட்டு நிறுவனங்களிடம் கேள்விக்குறியாகும் இந்த...
- # கிரெடிட் கார்டு - கடன் வசூல் என்ற பெயரில் அராஜகமா?
- # மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரி...
- # வணிக நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையும்..., கு...
- # கல்வி முறையில் மாற்றம் தேவை!
- # கிராமங்களில் வங்கிச் சேவை எஸ். கோபாலகிருஷ்ணன்
- # நாட்டின் வளர்ச்சியில் நாளேடுகள்!
- திரைப்பட வரலாறு 708 இளையராஜா இசை அமைக்க மறுத்த ப...
- மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்
- வீரமணி மாமாவின் பெரியார் புரா பாரீர்
- கலாமின் கனவு இந்தியா ஏழைகளுக்கானதா?
- ஒலி, ஒளி, விளம்பரத் தொல்லை க.ப. அறவாணன
- நீரிழிவு நோயாளிக்கு புதிய வகை அரிசி கண்டுபிடிப்பு
- வானில் ஓர் எல்லைப் பிரச்னை! வி. கிருஷ்ணமூர்த்தி
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை வியாதிக்குத் த...
- மதிப்போ மதிப்பு; பங்கு மதிப்பு!! குப்புசாமி செல்ல...
- உயிர் எரிசக்தி மாயை-ஓர் அபாயம்! ஆர்.எஸ்.நாராயணன்
- ரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும் எஸ். கோபாலக...
- உளவுத் துறையில் ஊடுருவல் டி.புருஷோத்தமன்
- அமெரிக்க-இந்தியருக்கு “விடுதலை உணர்வு விருது’
- அரசியல்வாதிகளும் அரசியல்கட்சிகளும்! கே.ராமமூர்த்தி
- அமெரிக்கர்களின் சேமிப்பு
- மேலாளர்களிடம் மனதில் உள்ளதை கொட்டலாமா?
- அமெரிக்காவில் நல்ல டாக்டர்களை கண்டு பிடிப்பது எப்படி?
- பணக்காரர்கள் திமிர் பிடித்தவர்களா?
-
▼
Jul
(26)
வணக்கம்
இங்கே இணைய தளங்களில் நான் பார்த்ததை, படித்ததை, கேட்டதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
...............................
செந்தில் குமார்
Subscribe to:
Post Comments (Atom)