இலவசமாய் அரிசி கொடுக்கிறார்கள், தொலைக்காட்சி பெட்டி தவிர சாப்பாடும் போடுகிறார்கள். இதெல்லாம் விட்டு இலவசமாய் கல்வி கொடுத்தால் என்ன கேடு வந்துவிடும்.
அனைவருக்கும் கல்வியும் மருத்துவமும் இலவசமாய் கொடுக்கவேண்டும் என்று ஒரு அரசியல் வாதிக்காவது தோன்றுமா? கல்விக்கு Cess என்று ஒன்று போன வருடம் போட்டார்கள். என்ன ஆயிற்று அந்த பணம்? யாருக்காகவாது இலவசக்கல்வி கொடுப்பார்களா? கொடுத்தார்களா?.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் போனால் Donation என்றும் வருடாந்திர கட்டணம் என்று இன்றும் கொடுக்கவேண்டி இருந்தது. இன்றும் இருக்கும். ஆங்கிலக்கல்வி படிக்கவேண்டுமென்றால் கட்டாயம் கொடுக்க வேண்டும். அங்கேயே பிரிவினை. காசுள்ளவன் ஆங்கிலம் படிப்பான் காசில்லாதவன் தமிழ் படிப்பான் என்று. அரசாங்கப்பள்ளிகளிலேயே இந்த நிலைமை.
எனக்கு தெரிந்து என் நண்பனின் அம்மா வீட்டு வேலை செய்து தான் படிக்கவைத்தாள். அவளிடம் ஆயிரம் ரூபாய் இல்லை. அதற்காக நாயாய் பேயாய் அலைந்து அந்த தாய் பணம் கட்டியது இன்றும் நினைவில் நிற்கிறது. கொடுமை என்னவெனில் மற்ற செலவுகளுக்கு அந்த அம்மா தலைமை ஆசிரியர் வீட்டிலேயே வேலை செய்து தான் 2 வருடம் மேல்நிலைக்கல்வி படிக்கமுடிந்தது என் நண்பனால்.
வியாபாரக் கல்வி, இட ஒதுக்கீட்டுக் கல்வி( பணம், சமூகம்) என்று என்ன என்ன வழி உண்டோ அவ்வளவிலும் பிரிந்து தான் கிடக்கிறோம். எல்லோரும் மறந்துவிடும் மற்றொரு பிரிவினை வட்டார அளவில் கல்வி. வடநாட்டு மக்களை கேளுங்கள், பாரதியாரை தவிர உருப்படியாய் ஒரு தமிழ்நாட்டு சுதந்திர போராட்டவீரர் பேர் தெரியாது.
அடுத்தது இந்த கல்வித்திட்டப்பிரிவினை. CBSE படித்தவனுக்கு IIT entrance சுலபம். மாநிலக்கல்வி படித்தவனுக்கு பொறியியல், மருத்துவம் சுலபம் என்று குழப்படியான கல்வி முறை. இதில் ஆங்கிலோ இந்தியன் என்று கல்வி முறை வேறு. தமிழ், ஊறுகாய் மாதிரி அந்த கல்வி முறையில் இருக்கிறது.
சுதந்திரம் வாங்கி 60 வருடம் ஆகிறது இன்னும் என்ன ஆங்கிலோ இந்தியன் கல்வி முறை. இதில் படித்த ஒரு நண்பனுக்கு தமிழ் படிக்க வராது. நம்பினால் நம்புங்கள், ஆங்கிலோ இந்தியன் கல்வி படித்த அவனால் ஒரு கட்டுரையோ கவிதையோ தமிழில் படிக்க இயலாது. நான் மிகவும் வருந்தி சொன்னதன் பேரில் பல முறை புத்தகத்தை திணித்து படி படி என்று படுத்தியதின் பேரில் என்னை திருப்திபடுத்த பொன்னியின் செல்வன் படித்தான் அவன், ஆங்கிலத்தில். ஆங்கிலத்தில் பொன்னியின் செல்வன் படித்த ஒரே(எனக்குதெரிந்து) தமிழன் அவனாகத்தான் இருக்கும். ஷேக்ஸ்பியரிலும் ஷெல்லியிலும் வித்தகன் அவன். என்ன மாதிரியான் ஒரு கல்வி முறை இது?
அதற்கு நேர் எதிராக கிராமத்தில் எனக்கு மற்றொரு நண்பன். ஆங்கிலம் சுட்டு போட்டாலும் வராது. கடைசியில் ஆங்கில தட்டச்சும், சுருக்கெழுத்தும் பயின்று காவல்துறையில் ரிப்போட்டராக போக வேலை கிடைத்த போது ஒரு முழு லிப்கோ அகரமுதிலியை நாம் பாட புத்தகம் படிப்பது மாதிரி படித்தான். ஏதாவது பக்கத்தை பிரித்து ஏதாவது சொல்லைக்கேள் அர்த்தம் சொல்கிறேன் என்று படுத்தி இருக்கிறான்.
ஒரு ஒழுங்குபட்ட கல்வி முறை இல்லை இதனால் பாதிக்கப்படுவது எல்லோருமே தான். ஏழைகளுக்கும், கிரமத்தானுக்கும் தமிழைவிட்டால் நாதி இல்லை என்று ஆகிவிட்டது. எனக்கு தெரிந்து பல பேர் நல்ல ஆங்கில அறிவில்லாத்தால் நேர்முகத்தேர்வில் தோற்றவர்கள் இருக்கிறார்கள். என்ன ஒரு குழப்படியான செயல்திட்டம் இது.
வருடம் போய் வருடம் வந்தால் ஒவ்வொரு மாநிலத்திலும், பொறியியல் கல்லூரி நுழைவுத்தேர்வு கோர்ட் கோர்ட்டாக போய்கொண்டிருக்கிறது ஒரு மராட்டிய மாநில கல்வி முறையில் 60 மதிப்பெண் வாங்கியவனையும் தமிழ்நாட்டில் 60 மதிப்பெண் வாங்கிவனையும் ஒரே நிகரில் வைக்கமுடியுமா? முதலில் எந்த சிஸ்டத்தில் படித்தவன் என்று கேள்வி அல்லவா வருகிறது!!!
இந்தியா முழுக்க ஒரே பாடத்திட்டம், ஒரே கல்லூரி நுழைவு முறை என்றல்லவா இருக்கவேண்டும். அப்படி இருந்தால் என்ன மாறிவிடும். அதில் சாதகம் என்ன, பாதகம் என்ன? வெறும் கேள்விகளாய் இருக்கிறதே அன்றி பதில் தான் இல்லை.
Article:
http://msathia.wordpress.com/2007/10/10/நம்-கல்விமுறை-உருப்படுமா/
இந்த உலகில் நீ பார்க்கும் பெண் உண்மையான பெண் அல்ல.அவள் நூற்றாண்டு காலமாக கறை படுத்தப் பட்டு வருபவள். பெண் கறை படிந்தவளாக இருக்கும் போது ஆண் மட்டும் இயற்கையானவனாக இருக்க முடியாது.ஆணுக்குப் பிறப்பளிப்பவளே அந்தப் பெண்தானே. அவள் இயல்பாக இல்லையெனில் அவள் குழந்தைகளும், அது ஆணோ, பெண்ணோ - அந்த குழந்தைகளும் இயல்பாக இருக்காது.
பெண்களுக்கு விடுதலை மிக மிகத் தேவை. ஆனால் விடுதலை என்ற பெயரால் நடந்துக் கொண்டிருப்பவை வெறும் முட்டாள்தனமானவையே.அது வெறும் காப்பியடித்தல், வேஷமிட்டுக் கொள்ளல், விடுதலை அல்ல.
உண்மையான விடுதலையென்பது பெண்களை மிகச் சரியான ஒரு பெண்ணாய்தான் மாற்றும். ஆணின் நகலாக அல்ல. ஆனால் இப்போது அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது.பெண்கள் ஆண்கள் போல ஆக விரும்புகின்ற்னர். ஆண் சிகரெட் குடித்தால் பெண்ணும் சிகரெட் பிடிக்க வேண்டும். ஆண் ஒரு விஷயத்தைச் செய்தால் பெண்ணும் அதைச் செய்தாக வேண்டுமென்கிறாள். பெண் இரண்டாம் தர ஆணாக மாறிக் கொண்டிருக்கிறாள்.
பெண் ஒரு உண்மையான பெண்ணாக இருக்க சுதந்திரம் இல்லையென்றால் ஆணுக்கும் நிஜமாகவே ஆண் ஆக சுதந்திரம் என்றும் கிடைக்காது. பெண்ணின் சுதந்திரம் ஆணின் சுதந்திரத்திற்கு மிக அவசியம்.அடிமைப் படுத்தப் பட்ட ஒரு பெண் வெகு நிச்சயம் ஆணையும் அடிமையாக்க முயலுவாள்.அவள் வழி நுட்பமானது. மிக மிக நுட்பமான வழிகளில் அவள் ஆணை அடிமைப் படுத்த முயலுவாள்.
அவள் உன்னுடன் நேராக மோத முயல மாட்டாள். அவள் சண்டை மறைமுகமானது. அவள் அழுவாள். கதறுவாள். அவள் உன்னை அடிக்க மாட்டாள். தன்னைத் தானே அடித்துக் கொள்வாள். மனைவி தன்னைத் தானே அடித்துக் கொள்வதன் மூலம், அழுது கதறுவதன் மூலம், மிகப் பலமான ஆண் கூட அவளுக்கு அடிமையாவான். பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவள் அதை ஆணுக்கும் தர முடியும்.
கடந்த காலத்தில் ஆண் பெண்களை மிகவும் புனிதமானவர்கள், தேவதைகள் என்று நம்ப வைத்தான். ஆண் தூய்மையற்றவன். பையன்கள் பொறுக்கிகள். ஆனால் பெண்? அவள் தெய்வீகமானவள். ஆண் பெண்ணை உயரமான பீடத்தில் ஏற்றி வைத்தான். பெண்ணை அடக்கி வைக்க அவனது தந்திரம் அது.
ஆண் அவளை வணங்கினான். அப்படி வணங்குவதன் மூலம் அவளை அடக்கி வைத்தான்.ஆம். அப்படி இயல்பாக பீடத்தின் மேல் அமர்த்தப்பட்ட பெண் தன்னை தெய்வீகமாய் நினைத்துக் கொண்டாள். அதனாலேயே ஆண்கள் செய்தவற்றையெல்லாம் அவளால் செய்ய முடிய வில்லை.
அவளது ஈகோவை, ஆணவத்தை மீறி அவளால் எதுவும் செய்ய முடிய வில்லை. அந்த உயர்ந்த பீடம் அவளது ஈகோவிற்கு மிகவும் திருப்தியளித்தது. அவள் ஒரு தாய். அவள் ஒரு தெய்வம். ஆணை விட அதிக தெய்வத்தன்மை உடையவள்.
அதனாலேயே ஆண் காலம் காலமாய் அவனது வழியிலேயே இருந்து வருகிறான். பெண் மட்டும் எப்போதும் புனிதத் தன்மையுடையவளாய் மட்டுமே இருக்க வேண்டும் என்று கற்பிக்கப் பட்டு வருகிறாள். பெண் சராசரியாக இருக்க என்றுமே அனுமதிக்கப் பட்டதில்லை. சராசரி பெண்கள் மோசமானவர்கள் என்ற கற்பிதத்தை இந்த சமூகத்தில் ஆண் உருவாக்கி வைத்திருக்கிறான்.
நினைவில் கொள்ள வேண்டிய அடிப்படைகளில் ஒன்று இது: நீ யாரையாவது அடிமைப் படுத்தினால் நீயும் கடைசியில்,முடிவான அடிமைதான் ஆவாய், சுதந்திரமாக இருக்க முடியாது. நீ சுதந்திரமாக இருக்க விரும்பினால், மற்றவர்களுக்கும் விடுதலையைக் கொடு.
மார்க்ஸ் இந்த சமுதாயத்தை இரண்டு இனமாகப் பார்த்தார். ஏழைகள் பணக்காரர்கள் என்று. நான் இந்த சமுதாயத்தை இரண்டு இனமாகப் பார்க்கிறேன். ஆண்கள். பெண்கள்.
ஆண் பல நூற்றாண்டுகளாய் எஜமானனாய் இருக்கிறான். பெண் அடிமையாய் இருக்கிறாள். அவளை ஏலம் போட்டார்கள். விற்றார்கள். உயிருடன் எரித்தார்கள். எந்த ஒரு காரணத்தின் பொருட்டாவது அவளை கற்பழிக்க முனைந்தார்கள்.
பெண்களுக்கு போர்களில் ஈடுபாடு கிடையாது. பெண்களுக்கு அணுகுண்டு ஆயுதங்களில் ஈடுபாடு கிடையாது. அவர்களுக்கு கம்யூனிசத்திலும், முதலாளித்துவத்திலும் ஈடுபாடு கிடையாது.
இந்த எல்லா இசமும் தலையிலிருந்து வந்தவை. பெண்கள் வாழ்வை அனுபவிப்பதில், வாழ்வின் சின்ன சின்ன அழகான விஷயங்களை ரசிப்பதில், தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றையும் ரசனையுடன் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள்.
ஆண்களே உங்களது வாழ்க்கை சொர்க்கமாய் அமைய வேண்டுமா? பெண்களை நேசியுங்கள்.
- பெண்ணின் பெருமை யிலிருந்து ஓஷோ.
Powered by Bookmarkify™
Article:
http://feeds.feedburner.com/~r/nandha/~3/170985119/
உ . ரா. வரதராசன்
மோரிஷஸ், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு சின்னஞ்சிறு தீவு. அதன் மக்கள்தொகை வெறும் 12 லட்சம் மட்டுமே; நிலப்பரப்பைக் கணக்கிட்டால் இந்தியாவில் நூறில் ஒரு பங்குக்கும் (ஒரு சதவிகிதத்திற்கும்) குறைவானதே. இந்த நாட்டோடு இந்தியா செய்து கொண்டுள்ள ஓர் ஒப்பந்தம் இந்திய நாட்டின் சட்டங்களைச் செல்லாக் காசாக ஆக்கிவிட்டு, வரியை ஏய்த்துக் கொள்ளை லாபம் கொழிப்பதற்கான ராஜபாட்டை ஆகி இருக்கிறது.
இந்தியா - மோரிஷஸ் நாடுகளுக்கிடையே இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கை என்ற பெயரில் 1983-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறு ஒப்பந்தம் செய்து கொள்ளும் இரண்டு நாடுகளின் குடிமக்கள் அல்லது நிறுவனங்கள் பரஸ்பரம் வியாபாரம் மற்றும் தொழில் தொடர்புகளை மேற்கொள்கிறபோதோ அல்லது வேறு வகையில் வருமானம் ஈட்டுகிறபோதோ சொந்த நாட்டிலும் வருமான வரி கட்ட வேண்டும். வெளிநாட்டிலும் வரி கட்ட வேண்டும் என்ற நிலைமை ஏற்படுவதுண்டு. இது ஒரே வருமானத்தின் மீது இரண்டுமுறை வரி கட்டுகிற இரட்டை வரி விதிப்பாக அமைந்தது. இதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக, ஏதாவது ஒரு நாட்டில் வரி விதிப்புக்கு ஆட்பட்டால் மற்றொன்றில் வரிவிலக்கு அளிப்பதற்காகவே இந்த உடன்படிக்கை உருவானது.
இந்தியா இதுபோன்ற உடன்படிக்கைகளை 50-க்கும் மேற்பட்ட நாடுகளோடு செய்து கொண்டுள்ளது. ஆனால் இந்த உடன்படிக்கைகள் அனைத்தும் ஒரே விதமான சரத்துகளை உள்ளடக்கியதாக இல்லை. மோரிஷஸ் நாட்டோடு செய்யப்பட்டுள்ள உடன்படிக்கையை ஒத்த தன்மையில் குறிப்பிட்ட சில நாடுகளோடு மட்டுமே இந்தியா மேற்கொண்டுள்ளது. இந்திய - மோரிஷஸ் உடன்படிக்கை அமலில் இருந்த முதல் பத்தாண்டுகளில், பிரச்னை எதுவும் பெரிதாக எழவில்லை.
1991ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற உலகமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், இந்த மோரிஷஸ் உடன்படிக்கைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தது. 1992-ம் ஆண்டு முதல், வெளிநாட்டுப் பெரும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் நுழைய அனுமதிக்கப்பட்டது. அதே 1992ஆம் ஆண்டில் மோரிஷஸ் அரசாங்கமும் கடல் கடந்த வியாபார நடவடிக்கைகளுக்கான ஆணையம் (ஞச்ச்ள்ட்ர்ழ்ங் ஆன்ள்ண்ய்ங்ள்ள் அஸ்ரீற்ண்ஸ்ண்ற்ண்ங்ள் அன்ற்ட்ர்ழ்ண்ற்ஹ்) ஒன்றை நிறுவச் சட்டம் இயற்றியது. அதன் கீழ் எந்த ஒரு வெளிநாட்டுக் கம்பெனியும், மோரிஷஸில் ஒரு துணைக் கம்பெனியைப் பதிவு செய்து கொண்டு, வெளிநாடுகளில் (பங்குச்சந்தை) வர்த்தகத்தில் ஈடுபட வழிவகை செய்யப்பட்டது.
இதற்குப் பிறகுதான் மோரிஷஸ் பாதை வழியாக வெளிநாட்டு நிதி மூலதனம் வேக வேகமாக இந்தியாவிற்குள் நுழையத் தொடங்கியது. 1992 - 93இல் மோரிஷஸ் நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் (பங்குச் சந்தை வர்த்தகத்திற்கு) வந்த முதலீடுகள் ரூ. 17 கோடியாக இருந்தது. இதுவே 2000 - 01ஆம் ஆண்டில் ரூ. 74,050 கோடியாக உயர்ந்தது. சராசரியாக, இந்தியாவிற்குள் நுழையும் வெளிநாட்டு மூலதன வரவுகளில் மூன்றில் ஒரு பகுதி மோரிஷஸ் பாதை வழியாக வந்ததுதான் என்று மத்திய அரசின் அதிகாரபூர்வமான தகவல்கள் உணர்த்துகின்றன. 12 லட்சம் மக்கள்தொகையை மட்டுமே கொண்டுள்ள மோரிஷஸ் நாட்டில் இவ்வளவு பெருந்தொகைகள் மூலதனமாக ஆண்டுதோறும் உருவாகி வெளிநாடுகளுக்குப் படையெடுக்கும் வாய்ப்பு அறவே இல்லை; எனவே, மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மூலதனம் மோரிஷஸ் பாதை வழியாக அனுப்பப்படுகிறது என்பதே யதார்த்தம்!
மோரிஷஸ் பாதை மீது பன்னாட்டு மூலதனத்திற்கு ஏன் இவ்வளவு மோகம்? வெளிநாட்டுக் கம்பெனி மோரிஷஸ் நாட்டில் துணைக் கம்பெனியைப் பதிவு செய்வது மிக மிக எளிது. பன்னாட்டு பகாசூரக் கம்பெனிகள் இவ்வாறு துணைக் கம்பெனியைப் பதிவு செய்து அவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களை மோரிஷஸ் பாதை வழியே இந்தியாவுக்கு அனுப்புவதும், பங்குச் சந்தை வர்த்தகத்தில் லாபம் பெருக்குவதும், அந்த லாபத்தை மோரிஷஸ் வழியாகவே திருப்பி வரவழைத்துக் கொள்வதும் மிக எளிதாக நடைபெற்று வருகிறது.
இப்படிப் பெறப்படும் லாபத்திற்கு இந்திய - மோரிஷஸ் உடன்படிக்கை காரணமாக, இந்தியாவில் எந்த வரியும் மோரிஷஸ் நாடு கட்ட வேண்டிய அவசியமில்லை. எனவே, எந்த வரிச்சுமையும் இல்லாமல் வருமானம் கொழிக்கிற வழியாக மோரிஷஸ் பாதை மாறிவிட்டது.
இப்படி 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மோரிஷஸ் கம்பெனிகளாக, இந்தியப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு சற்றும் சளைக்காமல் வெளிநாடு வாழ் இந்தியர்களும், இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு இயங்கும் கம்பெனிகளும் மோரிஷஸ் பாதையை வரி ஏய்ப்புக்குப் பயன்படுத்தி வருகின்றன. இதன் விளைவு, மோரிஷஸ் பாதையில் வலம் வந்து பங்குச்சந்தை சூதாட்டத்தில் சம்பாதிக்கும் கொள்ளை லாபத்துக்கு இந்தியாவிலும் சரி, மோரிஷஸிலும் சரி எந்த வரியும் கிடையாது.
இந்த மோரிஷஸ் பாதையை வரி ஏய்ப்புக்காகப் பயன்படுத்திய சில உள்நாட்டுக் கம்பெனிகள் மீது இந்திய வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து மார்ச் 29, 2000 அன்று ஆணை பிறப்பித்தது. இதன் காரணமாக வெளிநாட்டு மூலதனம் வருவது தடைபட்டு விடும்; வந்த மூலதனமும் வெளியே பறந்தோடி விடும் என்ற அச்சம் காரணமாக, அவசர அவசரமாக ஏப்ரல் 13, 2000 அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. மோரிஷஸ் அரசாங்கம் ஒரு கம்பெனிக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கியிருந்தாலே, அந்தக் கம்பெனியின் உரிமையாளர்களோ, அதன் மூலம் முதலீடு செய்பவர்களோ மோரிஷஸில் குடியிருப்பதாகக் கருதப்படுவார்கள்; அது தொடர்பாக எந்தவித விசாரணையோ, ஆட்சேபமோ எழுப்பக்கூடாது என்பது அந்த சுற்றறிக்கையின் கட்டளை!
இது நியாயமற்றது என்று “சுதந்திரம் காப்போம் இயக்கம்’ என்ற அமைப்பு தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கைத் தொடுத்தவர்களில் சிவ காந்த் ஜா என்ற வருமான வரித்துறை முன்னாள் முதன்மை ஆணையரும் ஒருவர். தில்லி உயர் நீதிமன்றம் இந்த சுற்றறிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்தது. “”இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு என்பது, இரண்டு நாடுகளிலும் வரி கட்டுவதைத் தவிர்ப்பதற்காகத்தானே தவிர, எந்த நாட்டிலும் வரியைக் கட்டாமல் ஏய்ப்பதற்காக அல்ல; அதை அனுமதிக்க முடியாது” என்பது அத்தீர்ப்பின் சாரம்.
மத்திய அரசோ இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது; “குளோபல் பிசினஸ் இன்ஸ்டிட்யூட்’ என்ற சர்வதேச முதலீட்டாளர்களின் கூட்டமைப்பு ஒன்றும் இந்த மேல்முறையீட்டில் மனுதாரராகச் சேர்ந்து வழக்காடியது. (இதன் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், பின்னர் மத்திய அரசின் சட்ட அமைச்சரானவர்!) உச்ச நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்துத் தீர்ப்பளித்தது.
மோரிஷஸ் உடன்படிக்கை வரிஏய்ப்புக்கான வசதியான பாதையாகப் பயன்படுகிறது என்பதை 2005இல் மத்திய கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முன்பாக 2001இல் கேத்தன் பாரிக் பங்குச்சந்தை ஊழலை விசாரித்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அறிக்கையும் இதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தக் கூட்டுக்குழுவின் முன் சாட்சியமளித்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, “”மோரிஷஸ் பாதை தவறாகப் பயன்படுத்தப்படுவது எனக்குத் தெரியும். ஆனால் (மத்திய அரசின்) வரி வருவாயைப் பெருக்குவதை விட வெளிநாட்டு மூலதனத்தின் வரவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், மோரிஷஸ் உடன்படிக்கையின் ஓட்டைகளை அடைக்க முற்படவில்லை” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.
2004-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு “இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்போம்’ என்று குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் கூறியிருந்தது. ஆனால் குறைந்தபட்சப் பொதுத்திட்டத்தின் வாக்குறுதி “இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்வதற்கான உறுதிமொழியல்ல. அதை இந்தியக் கம்பெனிகள் தவறாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது மட்டுமே’ என்று நிதியமைச்சர் புதிய விளக்கமளித்தார். இது முந்தைய அரசு விட்டுச்சென்றுள்ள பிரச்னை; சர்வதேச ராஜிய உறவுகள் சம்பந்தப்பட்ட ஒன்று; தன்னிச்சையாக இந்தியா இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும் அவர் கைவிரித்துவிட்டார்.
இந்தியாவைப் போலவே மோரிஷஸýடன் உடன்படிக்கை செய்துகொண்ட இன்னொரு நாடு இந்தோனேஷியா. மோரிஷஸ் நாடு தனது சட்டத்தைத் திருத்தி வெளிநாட்டவர்கள் மோரிஷிஸில் துணைக் கம்பெனிகளைப் பதிவு செய்து மற்ற நாடுகளில் வர்த்தகம் செய்ய அனுமதித்ததைக் காரணம் காட்டி 2005ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இந்தோனேஷியா மோரிஷஸ் நாட்டுடனான உடன்படிக்கையை ஒட்டுமொத்தமாக ரத்தே செய்துவிட்டது. இந்தோனேஷியாவுக்கு சாத்தியப்படுகிற இந்த வழிமுறை இந்தியாவுக்கு மட்டும் பொருந்தாது என்பதில் எந்த நியாயமும் இல்லை.
வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கபுரியாக மோரிஷஸ் பாதை தொடர்கிறது.
(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)
எஸ். கோபாலகிருஷ்ணன்
சென்ற பல மாதங்களாக வங்கிக் கடனுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தவண்ணம் இருந்தது. காரணம், கடந்த ஆண்டு வங்கிக் கடனுக்கான வட்டிவீதம் - குறிப்பாக வீட்டுக் கடனுக்கான வட்டிவீதம் - முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிட கணிசமாக அதிகரிக்கப்பட்டது. வட்டி வீதம் உயர்ந்ததால் புதிதாக வீடு அல்லது பிளாட் வாங்குபவர்களின் எண்ணிக்கை சரிந்தது. அதுமட்டுமல்லாமல், 2007ம் ஆண்டில் வங்கிகள் வழங்கிய ஒட்டுமொத்தக் கடன்தொகை, முந்தைய ஆண்டுகளில் வழங்கிய கடன்தொகையைவிடக் குறைவு என பாரத ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி சென்ற ஜனவரி மாத இறுதியில் வெளியிட்ட புதிய கடன் கொள்கையில், கடன்களுக்கான வட்டி வீதம் குறைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. சமீபத்திய கடன்கொள்கையில், எந்தவித கடனுக்கான வட்டிவீதமும் குறைக்கப்படவில்லை. காரணம், ரிசர்வ் வங்கியின் முழுக்கவனமும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே இருந்தது. வட்டிவீதம் குறைக்கப்பட்டால், பணவீக்கம் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி கருதியிருக்கக் கூடும். அதேநேரம், எதிர்காலத்தில் அவசியம் ஏற்பட்டால் வட்டிவீதத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே ரிசர்வ் வங்கிக்கு மேலோங்கியிருந்தது.
பாரத ரிசர்வ் வங்கி இந்த நிலைப்பாட்டை எடுத்த சில தினங்களுக்கு முன், அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ், அந்த நாட்டில் வட்டி வீதத்தை 1984ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக ஒரே மூச்சில் முக்கால் சதவீதம் குறைத்தது. அதற்கு அடுத்த சில தினங்களில் மேலும் அரை சதவீதம் குறைத்தது.
அமெரிக்கப் பொருளாதாரம் மந்தமடைந்து வரும் சூழலில், அதற்குப் புத்துணர்ச்சி ஊட்டும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் அப்படியொரு மந்த நிலை இல்லை என்பது உண்மையே. எனினும், வட்டி அதிகரிப்பால், வீடு கட்டுவதற்கு அல்லது வாகனங்கள் வாங்குவதற்கு அல்லது தொழில் நடத்துவதற்குத் தேவையான வங்கிக் கடன் பெற மக்கள் முன்வரவில்லையெனில் அது நல்ல அறிகுறி அல்ல.
பொதுமக்களின் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் வட்டி வீதத்தைக் குறைப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.
சில தினங்களுக்கு முன் வெளியான தகவலின்படி, சென்ற டிசம்பர் மாதம் தொழில்துறை வளர்ச்சி வீதம் 7.6 சதவீதமாகக் குறைந்து உள்ளது.
2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொழில்துறை வளர்ச்சி 13.4 சதவீதமாக இருந்தது. இதனைக் கருத்தில்கொண்டால், சென்ற டிசம்பர் மாதத்தில் 7.6 சதவீத வளர்ச்சி என்பது மிகப்பெரும் சரிவு என்பது தெளிவு.
தொழிற்சாலைகளில் உற்பத்தி, மின்சாரம், நுகர்பொருள்கள் உற்பத்தி ஆகிய துறைகளில் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. பின்னர் வரக்கூடிய மந்த நிலைக்கு இது ஓர் அபாய அறிவிப்பு போன்றது.
இந்தப் பின்னணியில், சில தினங்களுக்கு முன், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பேசியது கவனிக்கத்தக்கது. கடந்த சில மாதங்களில் வங்கிகள் கடன் வழங்கும் தொகை கணிசமாகக் குறைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக, வீடு கட்டும் துறையிலும் நுகர்பொருள் உற்பத்தித் துறையிலும் வளர்ச்சி குறைந்திருப்பதற்கு வங்கிக் கடன் குறைந்திருப்பது ஒரு முக்கியக் காரணம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன், வரும் காலத்தில் இந்தத் துறைகளில் வளர்ச்சி அதிகரிக்கும் வகையில், இவற்றுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வங்கிகளை வலியுறுத்தியுள்ளார்.
எதிர்பார்த்தபடி, பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் தனது பிரதான கடன் வட்டி வீதத்தை 12.75 சதவீதத்திலிருந்து 12.50 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அலகாபாத் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் தங்களது வீட்டுக்கடன் வட்டி, சில்லறைக்கடன் வட்டி வீதங்களையும் குறைத்துக் கொண்டுள்ளன.
இதுவரை வட்டிக் குறைப்பை அறிவிக்காத இதர வங்கிகள் விரைவில் அவ்வித அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக, வணிக ரீதியில் அவ்வப்போது வட்டி வீதத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கு வங்கிகளுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. ரிசர்வ் வங்கிதான் அறிவிக்க வேண்டும் என்பதில்லை. எனினும், ரிசர்வ் வங்கி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தனது கடன் மற்றும் நிதிக் கொள்கையை வெளியிடுகிறது. இதிலிருந்து வரும் சமிக்ஞைகளுக்காக வங்கிகள் காத்திருப்பது வழக்கம். இந்த முறை, நிதி அமைச்சர் தெரிவித்த சூசகமான அறிவுரை, வங்கிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
முன்னதாக, கடன் கொள்கை வெளியானபோது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் கடன் வழங்குவதில் சற்று நிதானப்போக்கு இருக்கட்டும் என ரிசர்வ் வங்கி கருதியது புரிந்து கொள்ளக்கூடியதே. அதிலும் குறிப்பாக, பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படாத நேரம் அது. அது ஏற்றப்படும்போது, பணவீக்கம் உயரும் என்பது அறிந்ததே. தற்போது, நீண்டகாலமாகத் தள்ளி வைக்கப்பட்ட பெட்ரோல் விலை ஏற்றம் அறிவிக்கப்பட்டு விட்டது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளதால் பணவீக்கம் எந்த அளவு உயரக்கூடும் என்பதும் அடுத்த சில வாரங்களில் தெரிந்துவிடும்.
அதேநேரம், வளர்ச்சி விகிதம் குறைவதும் ஏற்புடையது அல்ல.
தற்போது, பல வங்கிகள் ஏற்கெனவே வட்டி வீதத்தைக் குறைத்துள்ள புதிய சூழலில், பாரத ரிசர்வ் வங்கி நிலைமையை மறு ஆய்வு செய்வதே பொருத்தமாக இருக்கும். ரிசர்வ் வங்கி தனது சமீபத்திய கடன் கொள்கையில் எவ்வித மாற்றமும் செய்யாமல்விட்ட “பேங்க் ரேட்’ (வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டிவீதம்); “ரெப்போ ரேட்’ எனப்படும் ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு முதலீட்டுப் பத்திரங்களின் மீது வழங்கும் குறுகிய காலக் கடனுக்கான வட்டிவீதம்; மற்றும் “ரிவர்ஸ் ரெப்போ ரேட்’ எனப்படும் வங்கிகளிடம் உள்ள உபரிப் பணத்தைக் குறுகிய காலத்துக்கு ரிசர்வ் வங்கி பெற்றுக்கொள்ளும் ஏற்பாட்டுக்கான வட்டிவீதம் ஆகிய அனைத்துவகை கடன்களுக்குமான வட்டிவீதத்தை விஞ்ஞான ரீதியில் மாற்றி அமைக்க பாரத ரிசர்வ் வங்கி முன் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
அப்படிச் செய்வதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் தற்போதைய வட்டிக் குறைப்பு செயல்பாடு ஸ்திரத்தன்மை அடைவதற்கு உதவுவதுடன் அது நீண்டகால அடிப்படையில் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாகவும் அமையும்.
வீட்டுக் கடன்களுக்கு வட்டிக் குறைப்பை அறிவித்துள்ள வங்கிகள், அறிவிப்போடு நின்றுவிடாமல் வீட்டுக் கடன் மற்றும் சில்லறைக் கடன்களுக்கான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, உரிய கடன் வழங்குவதில் ஆக்கபூர்வமான ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான், சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்று சதா கனவு காணும் நடுத்தர மக்களின் கனவு நனவாகும்.
அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தில் நீதித்துறை தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தக்க நேரத்தில் ஒரு தீர்ப்பு மூலம் அறிவுரை கூறியிருக்கிறது.
பிகார் மாநிலத்தில் பணிபுரியும் கால்நடைத்துறை டாக்டர்கள், தங்களுக்கும் மத்திய அரசில் பணிபுரியும் கால்நடைத்துறை டாக்டர்களின் ஊதிய விகிதமே வழங்கப்பட வேண்டும் என்று பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இரு அரசுகளின் டாக்டர்களும் செய்வது ஒரே வேலையைத்தானே, ஊதிய விகிதமும் ஒன்றாக இருந்தால் என்ன என்று பாட்னா உயர் நீதிமன்றம் பகுத்தறிவோடு சிந்தித்து, பிகார் கால்நடைத்துறை டாக்டர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது.
உடனே பிகார் அரசு இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. “பிகார் மாநில கால்நடைத்துறை டாக்டர்களின் பணிமுறை, பணியாற்ற வேண்டிய பகுதி, அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விதம் போன்றவற்றில் மத்திய அரசு டாக்டர்களுடன் ஒப்பிடும்போது வேறுபாடுகள் உள்ளன. அதுமட்டும் அல்லாது மத்திய அரசுக்குள்ள நிதி வசதி பிகார் போன்ற மாநிலங்களுக்குக் கிடையாது. அப்படியிருக்க மத்திய அரசின் ஊதிய விகிதத்தை கால்நடை டாக்டர்களுக்கு அமல்படுத்தினால் அதையே முன் உதாரணமாகக் கருதி மற்ற பிரிவினரும் கேட்கத் தொடங்கலாம். இது பெரிய பிரச்னையில் கொண்டுபோய்விடும்’ என்று சுட்டிக்காட்டியது.
உடனே பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், “ஊதிய விகிதத்தைத் தீர்மானிக்க வேண்டியது அரசின் நிர்வாகத்துறை; அதில் தேவையில்லாமல் நீதித்துறை தலையிட வேண்டியதில்லை’ என்று தக்க நேரத்தில் அறிவுறுத்தியிருக்கிறது.
தமிழக அரசுக்கு, அதிலும் குறிப்பாக முதல்வர் கருணாநிதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு; மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் ஊழியர்கள் கேட்க வேண்டும் என்றுகூட காத்திராமல் உடனே அறிவித்து அவர்களுடைய நன்றியையும் பாராட்டையும் பெற்றுவிடுவார்.
மத்திய, மாநில அரசுகளின் ஊதியக்குழுக்களின் நிழலே படியாத பொதுமக்கள்தான் பாவம், இதையெல்லாம் ஏக்கத்துடன் வேடிக்கை பார்க்க நேரிடுகிறது.
அமைப்புரீதியாகத் திரட்டப்படாத துறைகளில், “செய்யும் வேலைக்கு கூலி’ என்று மட்டுமே பேசப்படுகிறது. அதே போல வேலைக்கு வராத நாள்களுக்கு கூலி கிடைக்காது.
அரசு ஊழியத்தில்தான் அடிப்படை ஊதியம் தவிர, அகவிலைப்படி (விலைவாசி உயரும்போதெல்லாம் மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையில் அதை 3 மாதங்களுக்கு ஒருமுறை ஈடு செய்யும் ஏற்பாடு), நகரங்களில் பணிபுரிந்தால் நகர ஈட்டுப்படி, வாடகைப்படி, சிறப்புப் படி, இடர்ப்படி என்று “படிப்படியாக’ பல படிகள் அளக்கப்படுகின்றன. (இவையே போதாது என்ற மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கைகளிலும் நியாயம் இல்லாமல் இல்லை.)
இவை போக, ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுதோறும் “இன்கிரிமெண்ட்’ எனப்படும் ஊதிய உயர்வு. அதுபோக ஊதியக் குழுக்களின் பரிந்துரைகளுக்குப் பிறகு -அதுவும் நீண்ட போராட்டத்துக்குப் பிறகே -ஊதிய உயர்வு என்று அரசு ஊழியர்களின் காலம் கழிகிறது.
நாடு முழுக்க ஒரே மாதிரியான தொழில் செய்கிறவர்களுக்கு, ஒரே மாதிரி ஊதியம் கிடைக்க “”தேசிய ஊதியக் கொள்கை நிர்ணயிக்கப்பட வேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்போது அந்தக் கோரிக்கையே “கங்கை-காவிரி இணைப்பு’ போல நிறைவேற்ற முடியாத கோரிக்கைகள் பட்டியலில் சேர்ந்துவிட்டது.
வேளாண்மை, தொழில், சேவை ஆகிய துறைகளிலேயே வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே ஊதிய வேற்றுமை நிலவுகிறது. ஒரு மாநிலத்துக்குள்ளேயே வெவ்வேறு மாவட்டங்களில் ஊதியம் வேறுபடுகிறது. நாட்டிலேயே வடக்கு, மேற்கு மாநிலங்களில் ஊதியம் கட்டுபடியாகும் விதத்திலும் கிழக்கு, தெற்கு பகுதிகளில் மிகவும் குறைவாகவும் இருக்கிறது.
அமைப்புரீதியாகத் திரட்டப்படாதவர்களும் இந் நாட்டின் வாக்காளர்கள்தான் என்றாலும், அவர்களுக்கு அரசியல் தெளிவு இல்லாததால் அவர்களுடைய குடும்பங்களில் மொத்தம் எத்தனை வாக்குகள் என்று கணக்கிட்டு சலுகைகள் தரப்படுவதில்லை. கூலி உயர்வு கேட்கக்கூட ஒரு அந்தஸ்து தேவைப்படுகிறது இந்த நாட்டிலே!