இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் முரண்பாடான ஊதிய விகிதத்தில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
1988 முதல் அரசு உதவிபெறும் தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர் தகுதியுள்ள பலர், இடைநிலை ஆசிரியருக்கான ஊதிய விகிதத்தில் (அடிப்படை சம்பளம் ரூ. 4500) பணியாற்றி வருகின்றனர். அதே தகுதிகளுடன் 2003 ஜூனில் 6, 7, 8ம் வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் இன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதத்தில் (ரூ. 5500) பணியாற்றுகின்றனர். இந்த பணியிடங்களில் 1995 98 வரையில் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆயிரத்து 84 பட்டதாரி ஆசிரியர்கள், குழந்தைகள் மனநலப் பயிற்சி பெறவில்லை என கூறி அவர்களுக்கு ஒருமாத காலம் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் பெற்ற அடிப்படை ஊதியமான ரூ. 5375 குறைக்கப்பட்டு ரூ. 4500 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஊதிய தொகையை 2003 ஜூன் முதல் பெற்று வருகின்றனர். 1995க்கு முன்பு அரசின் கொள்கைப்படி இடைநிலை ஆசிரியர்கள் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது.
ஆனால் 2002ம் ஆண்டு முதல் “இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர்களைத்தான் நியமிக்க வேண்டும்’ என்ற கொள்கை மாற்றம் ஏற்பட்டது. அதனடிப்படையில் 2003 ஜூன் முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதியுள்ள ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் தற்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் (ரூ. 5500) பெற்று வருகின்றனர். இதனால் 1995க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும், 1995 முதல் 98 க்கு இடைப்பட்ட காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் இன்றும் இடைநிலை ஆசிரியர் சம்பளத்தில் பணியாற்றுவது முரண்பாடாக உள்ளது. ஒரே கல்வித் தகுதியுடன், ஒரே பணியை செய்யும் இருவேறு ஆசிரியர்கள் வெவ்வேறு சம்பள விகிதத்தில் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
பணிமூப்பு குறைவாக உள்ளவர், பணிமூப்பு அதிகம் உள்ளவரை விட அதிக சம்பளம் பெறும் நிலை உள்ளது. இந்த முரண்பாடுகளை களைய “ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர் தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் வகையில், அவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் என பதவி உயர்வு வழங்க வேண்டும். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறியதாவது: 6 முதல் 8ம் வகுப்புகளில் ஓய்வு பெறுவோரின் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதன் மூலம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தரம் உயர்த்த 15 ஆண்டுகளுக்கும் கூடுதலாகி விடும். எனவே இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் 3 தரப்பினராக பணியாற்றுவோரை பட்டதாரி ஆசிரியர்களாக மாற்றினால்தான் 6 முதல் 10 வரை அனைத்து பணியிடங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். இல்லையெனில் ஒரே பாடத்தை ஒரு பள்ளியில் இடைநிலை ஆசிரியரும், மற்றொரு பள்ளியில் பட்டதாரி ஆசிரியரும் நடத்துவர். இதனால் மாணவர்கள்தான் பாதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
குறிச்சொல் ஏதும் இல்லை.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
தொடர்புடைய இடுகைகள் ஏதும் இல்லை.
Article:
http://feeds.feedburner.com/~r/satrumun/~3/201757501/
தலைப்பு செய்திகள்
Blog Archive
-
▼
2007
(73)
-
▼
Dec
(13)
- # மண்ணிலிருந்து ‘பிரித்தெடுக்க’ப்படுகிறார்கள் மக்கள்
- # ‘விதை'யின் பிடியில் உலகம் (இனி பேரழிவு ஆயுதங்க...
- # நீதித்துறையின் விடுமுறைக்கால கொண்டாட்டம்...! ...
- # இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஒரு மோசடியா?
- # மருத்துவ மாணவர்களின் நாட்டுப்பற்று! கிராமப்புற ...
- # சர்வதேச வட்டி நிறுவனங்களின் முற்றுகையில் தமிழக ...
- # போலி மருத்துவர்களை உருவாக்க முனையும் தஞ்சை தமிழ...
- # முரண்பாடான ஊதிய விகிதத்தில் பணியாற்றும் பட்டதார...
- # வெள்ளையர்களின் நீங்காத நிறவெறி
- # சிபில்(CIBIL) என்ற சிலந்தி வலை!
- # இந்தியாவில் இயங்கும் தனியார் வங்கிகளை கட்டுப்பட...
- # சேவை: வந்தாச்சு…பொம்மை வேன்!
- # தணிக்கை முறையில் தப்புக் கணக்கு!
-
▼
Dec
(13)
வணக்கம்
இங்கே இணைய தளங்களில் நான் பார்த்ததை, படித்ததை, கேட்டதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
...............................
செந்தில் குமார்
Subscribe to:
Post Comments (Atom)