பன்னாட்டு நிறுவனங்கள் பலவற்றின் பெரிய dilemma இது தான். தங்கள் வியாபாரத்தை விரிவு படுத்தும் போது, “இந்தியாவிற்கு செல்வதா அல்லது சீனாவுக்கு செல்வதா?” என்ற கேள்விக்கு விடை தெரியாமல் பல நிறுவனங்கள் கன்சல்டன்சி நிறுவனங்களை தேடி செல்கின்றன.
இந்தியாவா, சீனாவா என்று குழம்பாமல் இரு நாடுகளிலும் வியாபாரத்தை விரிவு படுத்துவது தான் புத்திசாலித்தனம் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர். “இந்தியா அல்லது சீனா” என்றில்லாமல் “இந்தியா & சீனா” என்று strategy அமைப்பதற்கு மூன்று காரணங்களை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
1. இரு நாடுகளும் பல துறைகளில் அபரீத வளர்ச்சி அடைந்திருக்கின்றன. இந்த வளர்ச்சி இன்னும் தொடரும். உதாரணத்துக்கு சீனாவில் 450 மில்லியன் செல் போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர், இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் 150 மில்லியன் செல் போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒரு மாதத்துக்கு 60 லட்சம் புது வாடிக்கையாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர்! (ஏற்கனவே தவறுதலாக 24 கோடி என்று எழுதியிருந்தேன், Sorry..)
2. இந்தியாவும் சீனாவும் மாறுபட்ட துறைகளில் வல்லுனர்களாக உள்ளனர். உற்பத்தி துறைகளில் (manufacturing) சீனாவும் மென்பொருள் மற்றும் ஐ.டி. துறைகளில் இந்தியாவும் முண்ணணியில் இருப்பதால் இரு நாடுகளிலிருந்தும் பயனடையலாம்.
3. காப்புரிமையை (Intellectual Property) பாதுகாப்பதற்கு இரு நாடுகளிலும் வேலைகளை பகிர்ந்து கொடுப்பது நல்லது.
எந்த நாடானாலும் சரி, அந்த நாட்டின் கலாசாரத்துக்கு தகுந்தாற்போல தன் வியாபார உத்தியை மாற்றியமைத்தால் தான் நிறுவனங்கள் வெற்றியடைய முடியும்.
அப்படி செயல்பட்டதால் தான் Haier நிறுவனம் சீனாவில் பெரும் வெற்றியடைந்தது. கிராமங்களில் Haier விற்கும் வாஷிங் மெஷின்களில் துணிகளை மட்டுமல்லாது காய்கறிகளையும் வாஷ் செய்யலாம்!
நகரங்களில் Haier விற்கும் ஒரு குறிப்பிட்ட மாடல் வாஷிங் மெஷின்/ட்ரையர் ஒரு செட் துணியை மட்டும் சலவை செய்யக்கூடிய அளவுக்கு சிறிய வடிவில் உள்ளது. பதினைந்து நிமிடத்தில் சலவை முடிந்துவிடும்.
இப்படிப்பட்ட வாஷிங் மெஷின்கள் சீனாவில் பெரிய ஹிட்.
இந்தியாவில் டிஸ்னி சேனல் வித்தியாசமான உத்திகளால் வெற்றி பெறுகிறது. அமெரிக்காவில் பெரும் வெற்றியடைந்த High School Musicals படத்தை இந்தியாவில் ஹிந்தியில் தயாரிக்கிறது. அமெரிக்க படத்தில் கதாநாயகன் கூடைப்பந்து வீரன். இந்திய படத்தில் கிரிக்கெட் விளையாடுகிறார்.
இவர்களைப் போன்று Fox (Star TV) நிறுவனமும் “24” சீரியலை ஹிந்தியிலும் தமிழிலும் தயாரிக்கலாம். அழுகை மெகா சீரியல்களை பார்த்து சோகத்தில் வாடும் என் இனிய தமிழ் மக்களுக்கு ஒரு மாறுதலாக இருக்கும்.
Article:
http://tamilnithi.blogspot.com/2007/08/blog-post_08.html
தலைப்பு செய்திகள்
Blog Archive
-
▼
2007
(73)
-
▼
Oct
(13)
- # விவசாயம் அழிவதற்குக் காரணம் அரசியல்வாதிகள்தான்!
- # பங்குச்சந்தை: பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ்
- # வங்கிகளில் அரசு தலையீடு? எஸ். கோபாலகிருஷ்ணன்
- # இந்தியாவா, சீனாவா?
- # குரு திரைப்பட விமரிசனம் அம்பானி: முதலாளிகளின...
- # இது நியாயமா?
- # தகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு அளி...
- # நீர்நிலை ஆக்கிரமிப்பில் அரசு கட்டடங்கள் வி. கி...
- # மக்களுக்காகவே நிர்வாகம்! என். விட்டல
- # ரிலையன்ஸ் வேலையை செய்கிறது பார்வர்டு பிளாக
- # தேவை விழிப்புணர்வு!
- # அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள், ஜனநாயகத்தை ஆட்டம்க...
- # முஸ்லிம், கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு
-
▼
Oct
(13)
வணக்கம்
இங்கே இணைய தளங்களில் நான் பார்த்ததை, படித்ததை, கேட்டதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
...............................
செந்தில் குமார்
Subscribe to:
Post Comments (Atom)