இயற்கை விவசாயம் வெகு லாபகரமானதே, அதில் அதிகம் பயன்படும் ஒரு இயற்கை நோய் எதிர்ப்பு, வளர்ச்சி ஊக்கி பஞ்சகவ்யம் .இதனால் உற்பத்தி திறனும் அதிகரிக்கிறது .அதனை தயாரிப்பதை எப்படி என்று பார்ப்போம்!
பஞ்சகவ்யம் என்றால் பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது.
அவை!
1)சாணம்
2) கோமியம்
3) பால்
4) நெய்
5) தயிர்
இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கபடுவதே பஞ்சகவ்யம் இது ஆயுர் வேத வைத்தியம் , பயிர் வளர்ப்பு இரண்டிலும் பயன்படுகிறது.
மேலும் சில மூலப்பொருட்களை சேர்த்து இதன் திறனை அதிகரித்து இயற்கை விவசாயத்தில் தற்போது பயன்படுத்துகிறார்கள்.
மேம்படுத்தப்பட்ட பஞ்சகவ்யம் செய்யும்முறை:
மூலப்பொருள்:
*4 கிலோ சாண எரிவாயு கலனில் இருந்து பெறப்பட்ட சாணக்கூழ்
*1 கிலோ புதிய சாணம்
*3 லிட்டர் கோமியம்
*2 லிட்டர் பசும்பால்
*2 லிட்டர் பசு தயிர்
*1 லிட்டர் பசு நெய்
*3 லிட்டர் கரும்பு சாறு!
*12 பழுத்த வாழைப்பழம்
*3 லிட்டர் இளநீர்
*2 லிட்டர் தென்னம் கள்
இவை அனைத்தையும் வாய் அகன்ற மண்கலம் , அல்லது சிமெண்ட் தொட்டியில் விட்டு நன்றாக கலக்கவும். கலக்கப்போவது யாரு நாமளாச்சே கலக்கிட மாட்டோம்!
தொட்டியை மூடாமல் இதனை நிழலில் ஒரு வாரம் வைத்து இருக்க வேண்டும், தினசரி காலையும் மாலையும் ஒரு முறை கலக்கி விட வேண்டும்!
ஒரு வாரத்திற்கு பின் 20 லிட்டர் பஞ்சகவ்யம் தயார். இதில் ஒரு லிட்டர் எடுத்து அதனை 100 லிட்டர் தண்ணீரில் கலந்தால் 3 சதவீத அடர்த்தியுள்ள பஞ்ச கவ்யம் கிடைக்கும் அது ஒரு ஏக்கருக்கு தெளிக்க போதும்.
மேலும் விதைகளை நாற்றாங்களில் விதைக்கும் முன் 30 நிமிடம் பஞ்சகவ்ய கரைசலில் ஊரவைத்து விதை நேர்த்தி செய்தால் நாற்றுகள் நன்கு வளரும் நெல்லும் அதிகம் தூர்கட்டும்!
பஞ்ச கவ்யம் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கி, வளர்ச்சி ஊக்கி! இதனை தெளித்தால் மட்டும் போதும் மேற்கொண்டு எந்த பூச்சி மருந்தும் அடிக்க வேண்டாம் வயலுக்கு!
பஞ்ச கவ்யம் தெளித்த பிறகு மேலும் அதிக பலன் கிடைக்க தேங்காய் பால், மோர் கலந்து அதை ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் செர்த்து வயலுக்கு தெளித்தால் கூடுதல் வளர்ச்சி கிடைக்கும்.
Article:
http://vovalpaarvai.blogspot.com/2007/08/blog-post_12.html
தலைப்பு செய்திகள்
Blog Archive
-
▼
2007
(73)
-
▼
Aug
(18)
- # பிளாக் / இணையம் மூலம் சம்பாதிக்கும் வழிகள்
- # தொலைவழிக் கல்வியில் படிக்கிறீர்களா? உஷார்!!: மக்...
- # "விவசாயத்தில் விந்தை புரியும் இரு நாடுகள்"
- # வங்கிகளின் பேராசை
- # பங்குசந்தையை வீழ்த்திய விவகாரங்கள்!:
- # இயற்கை கொசு விரட்டிகள்!
- # உயிரை பறிக்கும் செல்போன்
- # இயற்கை விவசாயம் வெகு லாபகரமானதே
- # கடற்கரையில் டைட்டானியப் புதையல்!
- # தெரிந்தே செய்யும் தவறுகள்
- # ரிசர்வ் வங்கியின் கை வைத்தியம்!
- # கட்டாய கிராமப்புற மருத்துவ சேவை
- # அடிப்படை உரிமையாகுமா கல்வி?
- # ‘ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு: செவ்வணக்கம...
- # மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமை...
- # உலகம் முழுவதும் உள்ள புத்தக ஆர்வலர்களுக்கு ஓர் ந...
- # கனிமங்களின் சாதம், தாதுக்களும் பிரமாதம்
- # ஏகாதிபத்திய அடிமைகளே ! பொய்யுரை பதிவர்களே !!:
-
▼
Aug
(18)
வணக்கம்
இங்கே இணைய தளங்களில் நான் பார்த்ததை, படித்ததை, கேட்டதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
...............................
செந்தில் குமார்
Subscribe to:
Post Comments (Atom)